Friday 14 August 2015

என் சலங்கை !




நாட்டியம்  காணும் போது
நாட்டம் கொள்ளுதே என் மனது
நானும் ஆட விழைகின்றேன்
நாளும் பொழுதும் தவிக்கின்றேன்

கொஞ்சும் சலங்கையின் தீண்டலில்
நெஞ்சம் களித்திடும் ஆடலில்
என்னுயிராய் இருந்தாய் சலங்கையே
எங்கோ மறைந்தாய் நொடியிலே

மணிச்சலங்கையின் சிணுங்கல் கேட்டு 
மண்மகளின் மனம் ஆடுது கூத்து
பசியை மறந்து ரசித்தேன் உன்னை - நீ
அசையும் இசையில் மறந்தேன் என்னை

பதம் ஆடும் போது
பக்கம் இருந்தாய் நீயே !
பலம் அளித்து எனக்கு
புகழ் சேர்த்தாய் நீயே !

கனவோடும் கனிவோடும் - உன்னைப்
பதங்களில் அணிந்தேன்
தினந்தோறும் தவறாமல் - உன்னைப்
பணிந்தே தொழுதேன்

சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
உன்னை ஏந்தியதென் கரங்கள்
பதம் விட்டுப்  பிரிந்தாயே
உன்னைத் தேடுது  என் கண்கள்

உற்ற தோழியாய் இருந்தாய்
சற்று விலகியே சென்றாய் 
என் நடைக்குச் சத்தம் அளித்தாய்
என் மனதில் நித்தம் நிறைந்தாய் 

சதங்கையின் ஓசை கேட்டு
சந்தக்குயில் பாடுதே பாட்டு
என் இதய ராகம் கேட்டு
என் ஏக்கத்தை நீ ஓட்டு
`
பொற்சலங்கையின் சந்தமே
பொற்செல்வியின் இன்பமே
பொன்மலரோடு  காத்திருப்பேன் - இந்தப்
பெண்பதம் வந்து சேரவே !

அரங்க ஸ்ரீஜா

Friday 15 May 2015

Viyugam'15


Theme (Ancient Indian )

Life throws many opportunities. Grabbing them or losing them is in our actions. I thought of giving a try in a new area called "Designing" and here are the results :)





Main Posters






Event Posters














Friday 6 March 2015

அழகான வாழ்க்கை...




அன்பிற்கு எல்லையாய் அன்னை !
அரவணைத்து வளர்க்கின்றாள் என்னை !
அறிவிற்குச் சிகரமாய்த் தந்தை !
அறிவுரையால் சீரானது என் சிந்தை !

கல்வியைக் கண்ணாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் !
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவர்கள் !
கலைகளைச் சிறப்பாய்க் கற்பிக்கும் குருமார்கள் !
கலைமகளின் உருவாய்த் தோன்றியவர்கள் !

ஓம் காரப் பிரணவமாய் விளங்கிடும் இறைவன் !
ஒவ்வொரு மணித்துளியும் என்னுடன் இருக்கும் பரமன்   !
ஓதும் வேதமாய் எங்கும்  நிறைந்திருக்கும் பரந்தாமன் !
ஒவ்வொரு செயலிலும் என் துணையாய் நிற்கும் நண்பன் !

அனுபவங்களைப் பகிரும் தாத்தா பாட்டி !
அணுகினேன் அவர்களை இருகரம் நீட்டி !
அன்றாடம் என்னை வாழ்த்தும் தாத்தா !
அடைந்தேன் மகிழ்வை அவரது பாட்டால் !

குழலோடு எழிலாகக் காட்சியளிக்கும் கண்ணன் !
குழந்தைக்கு என்றும் துணையாய் நிற்கும் மன்னன் !
மயிற்பீலி சூடும் பிருந்தாவன பாலன் !
மங்கையின் மனத்தைக் கவர்ந்த சீலன் !

எப்போதும் சூழ்ந்து இருக்கும் சுற்றம் !
எப்பிறப்பிலும் கிடைக்காத பாச பந்தம் !
எங்கும் நிறைந்திருக்கும் நண்பர் கூட்டம் !
எங்கு தேடினாலும் கிடைக்காத பூந்தோட்டம் !

பசுமை வீசும் சிங்கார கிராமங்கள் !
பசியைப் போக்கும் நிலதெய்வங்கள் !
பார்ப்பவர் மனம் கவரும் தோட்டம் !
பரவசத்தைப் பரப்பும் பூக்கள் கூட்டம் !

அன்பான தாய் தந்தை !
அழகான குடும்பம் !
அறிவார்ந்த குருமார்கள் !
அனைத்துமாய் ஆண்டவன் !
அரவணைக்கும் உறவினர்கள் !
அக்கறையுள்ள நண்பர்கள் !

எத்துனை அழகான வாழ்க்கை !
எத்தனை பிறப்பிலும் கிடைக்காத பேறு !
அத்தனை பேருக்கும் நன்றிகள் நூறு !

- அரங்க ஸ்ரீஜா

Saturday 24 January 2015

என் அப்பா...

 


தோள் கொடுக்கும் தோழன் நீ  !
பார் புகழும் பக்தன் நீ !
திறம் கொண்ட தீரன் நீ !
தர்மம் செய்யும் தர்மன் நீ !

உன் கோபத்தில் குழந்தையைக் காண்கிறேன் !
உன் வேகத்தில் வேங்கையைக் காண்கிறேன் !
உன் வார்த்தைகளில் வலிமையைக் காண்கிறேன் !
உன் அர்ப்பணிப்பில் இறைவனைக் காண்கிறேன் !

கொஞ்சும் உன் மொழியில் குழலும் தோற்கும் !
மிஞ்சும் உன் அழகில் மயிலும் தோற்கும் !
உன் அன்பிற்கு முன் அன்னையும் தோற்றார் !
உன் அறிவிற்கு முன் ஆசிரியரும் தோற்றார் !

உன் கரம் பிடித்து நடக்கையிலே !
உள்ளத்தின் அச்சங்கள் விலகுகிறதே !
உன் கடைக்கண் பார்வையிலே !
உள்ள கடினங்கள் அனைத்தும் மறைகிறதே !

அகிலத்தை ஆளும் ஆண்டவன் !
அடியவளின் தந்தையாக அவதரித்தான் !
கர்வம் கொண்டேன் உன் மகளாய் இருக்கவே !
ஆர்வம் கொண்டேன் உன்னைப்போல் வாழவே !

நான் கற்றது அனைத்தும் உன்னிடமிருந்து !
உன் பார்வையின் கூர்மையில் தோற்றது பருந்து !
உன் அறிவுரைகளே என் வாழ்வின் விருந்து !
என் தந்தையே உன்னைப் பணிகிறேன் விழுந்து !


 - அரங்க ஸ்ரீஜா 

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...