அன்பென்னும்
ஆயுதம் கொண்டு
ஆண்டவனின்
அருள் வென்று
இன்முகச்
சிரிப்போடு - என்னை
ஈன்றேடுத்தாய்
அன்னையே !
உண்மைதனை
போதித்து
ஊரார்க்கு
உதவி செய்து
எளிமையாய்
வாழ்ந்து - என்னை
ஏற்றமடைய
வைத்தாய் எந்தாயே !
ஐயமுத
உணவு தந்து
ஒன்பது
கோள்களாய் இருந்து
ஓங்காரப்
பிரணவமாய் - என்
ஔடதமாய்
விளங்கும் தாயே !
உன்
தாள் பணிகிறேன் !
- அரங்க ஸ்ரீஜா