Friday 15 August 2014

தென்றல் !

தென்றல் !!!



அசைந்தாடும் அழகிய தென்றல் வந்து !
அழகிய பெண்ணின் செவியில் நின்று !
அசரீரி போன்று ஒரு செய்தி சொன்னது !

வாழையும் மாவும் தென்றலுக்கு ஒன்றே !
ஏழையும் செல்வந்தனும் தென்றலுக்கு ஒன்றே !
வானமும் பூமியும் தென்றலுக்கு ஒன்றே !

பேதம் பார்த்துத் தென்றல் வீசுவதும் இல்லை !
மதம் பார்த்துத் தென்றல் விலகிப்போவதும் இல்லை !
மாதம் பார்த்துத் தென்றல் மறைவதும் இல்லை !

எங்கும் நிறைந்து நான் தண்மை தருகிறேன் !
பொங்கும் மனங்களில் ஆனந்தம் அளிக்கிறேன் !
ஏங்கும் இதயங்களை இதமாய்த் தொடுகிறேன் !

மெல்லிய மனங்களை வருடுகிறேன் !
செல்லத் தீண்டலால் இதம் தருகிறேன் !
மெல்ல வந்து மனம் கவர்கிறேன் !

மக்கள் மனதில் ஏன் இத்தனை பேதம் !
மாக்களும் கூட காட்டிடும் கோபம் !
பூக்களைப் போல வாழ்வோம் நாமும் !

தூது சொல்ல தென்றல் வந்தது !
சூது அழிக்க வழி சொன்னது !
கேடு காலம் இனி அழிந்தது !

தென்றலின் கூற்றைக் கேட்டு வியந்தேன் பேதை !
என்றுமே இதயங்களை வருடும் நீ ஒரு போதை !
என்றென்றும் பார் செழித்திடக் காட்டினாய் பாதை !

- அரங்க ஸ்ரீஜா 

4 comments:

  1. Really impressed me. U can even write cinema songs. U hv that ability. Gods gift. Approach some cube field kavinger.

    ReplyDelete
  2. haare what a blend of literature nd artistic skills yaar.. congrats :D

    ReplyDelete
  3. உங்களின் தாய்ப்பாசத்திற்கு வணக்கம்
    அன்னையைத் தவிர அன்பிற்கு அகிலத்தில் ஈடான உயிர் ஏது எவருக்கும் .
    உங்களைப் பெற்ற அன்னைக்கும் தந்தைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  4. எனக்காக நேரம் செலவழித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ..தமது வருகைக்கும் ஆசிக்கும் வாழ்த்துக்கும் தலை வணங்குகிறேன்

    ReplyDelete

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...