Tuesday 31 December 2013

இயற்கை



தங்கமாய் மின்னும் கதிரவனின் கதிரொளி !
தங்கப் பயிர்களின் வாழ்விற்கு  உயிரொளி !

தாமரையில் மலர்கின்ற இதழ்கள் !
தன்னிகரற்ற அழகுப் பெட்டகங்கள் !

பச்சைப் பட்டாடையாய்ப் பரந்த வயல்கள் !
பாமரர் பசி போக்கும் சுந்தர வெளிகள் !

பொங்கிப் பெருகும் கடலலைகள் !
பொங்கும் பேரானந்தத்தின் சுவடுகள் !

கொஞ்சும் கிளிகளின் சுந்தர மொழிகள் !
பிஞ்சுக் குழந்தையின் மழலை மொழிகள் !

சிகரம் தொடும் உயர்ந்த மலைகள் !
செதுக்கினாலும் கிடைக்காத சிலைகள் !

மண்ணில் பொழியும் மழையின் துளிகள் !
மானுடம் வாழ வித்திட்ட வழிகள் !

மலரும் பூக்களின் நறுமண வாசம் !
மங்கையின் மனம் முழுவதும் வீசும் !

பறந்துத் திரியும் பறவைக் கூட்டம் !
பார்ப்பவர் மனதில் மகிழ்வை நாட்டும் !

தோகை விரித்தாடும் மயில் !
தோற்றத்தில் எத்தனை எழில் !

பூக்களில் அமரும் பட்டாம்பூச்சி !
பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி !

இயற்கையில் வாழும் கன்னி !
வியக்கிறேன் அதன் சிறப்பை எண்ணி !

அரங்க ஸ்ரீஜா 

No comments:

Post a Comment

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...