Wednesday 1 January 2014

என் காவியத் தலைவன் !!



பரணி  போற்றும் நாயகனே !
புரவி  ஏறி வருபவனே !
புதுக்  கவிதை  வடிக்கின்றேன்
புவன  சுந்தரனை  அடையவே !

எங்கு  இருக்கிறாய் ?  - ஏன்
ஏங்க  வைக்கிறாய் ?
காண  விழைகிறேன்  –ஏன்
கலங்கச்  செய்கிறாய் ?

அறியேன்  உன்  தோற்றம்
அறிய  விரும்புதே  நெஞ்சம்
மலர்  முகம்  காணாமலே
மனம்  நிறைந்தாய்  கண்ணாளனே !

தரிசனம்  அளிக்க  மாட்டாயா  ?
கரிசனம்  பார்க்க  மாட்டாயா ?
உன்னைச்  சேரத்  துடிக்கின்றேன்
என்னை  ஏற்க  மாட்டாயா ?

ஏங்கித்  தவிக்கிறதே  மனம்
உன்னைக்  காண  வேண்டுதே  தினம்
காத்து  நிற்கிறேன்  உனக்காக
காதல்  நிறைந்த விழிகள்  சிவக்க 

கனவில்  காண்கிறேன்  உன்னை
கண்டதும்  மறக்கிறேன்  என்னை
முகிலாய்  தோன்றினாய்  விண்ணோடு
கவிதையாய்  மாறினாய்  கையோடு


நினைவுகளில்  நடமாடும்   உன்னை
நேரில்  காணவிழைகிறேன்  நங்கை 
மனம்  வென்ற  மணவாளனே !
முகம்  காண  மனம்  ஏங்குதே !

உன்  வருகைக்காகக்  காத்திருப்பேன்
மான்விழி  சிவக்கப்  பூத்திருப்பேன்
மாலை  சூட  வருவாயா  ?
மனதை  எடுத்துச்  செல்வாயா ?

உன்  உள்ளம்  நிறைவேனா ?
இல்லை  விண்ணை  அடைவேனா ?        
விடைகள்  அறியாமலே
விழிகள்  கலங்கிடுதே !

- அரங்க ஸ்ரீஜா 

Tuesday 31 December 2013

இயற்கை



தங்கமாய் மின்னும் கதிரவனின் கதிரொளி !
தங்கப் பயிர்களின் வாழ்விற்கு  உயிரொளி !

தாமரையில் மலர்கின்ற இதழ்கள் !
தன்னிகரற்ற அழகுப் பெட்டகங்கள் !

பச்சைப் பட்டாடையாய்ப் பரந்த வயல்கள் !
பாமரர் பசி போக்கும் சுந்தர வெளிகள் !

பொங்கிப் பெருகும் கடலலைகள் !
பொங்கும் பேரானந்தத்தின் சுவடுகள் !

கொஞ்சும் கிளிகளின் சுந்தர மொழிகள் !
பிஞ்சுக் குழந்தையின் மழலை மொழிகள் !

சிகரம் தொடும் உயர்ந்த மலைகள் !
செதுக்கினாலும் கிடைக்காத சிலைகள் !

மண்ணில் பொழியும் மழையின் துளிகள் !
மானுடம் வாழ வித்திட்ட வழிகள் !

மலரும் பூக்களின் நறுமண வாசம் !
மங்கையின் மனம் முழுவதும் வீசும் !

பறந்துத் திரியும் பறவைக் கூட்டம் !
பார்ப்பவர் மனதில் மகிழ்வை நாட்டும் !

தோகை விரித்தாடும் மயில் !
தோற்றத்தில் எத்தனை எழில் !

பூக்களில் அமரும் பட்டாம்பூச்சி !
பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி !

இயற்கையில் வாழும் கன்னி !
வியக்கிறேன் அதன் சிறப்பை எண்ணி !

அரங்க ஸ்ரீஜா 

Friday 27 December 2013

அன்பான என் தந்தைக்கு...



அன்புள்ள அப்பா !!!
தயைமிகு தந்தை !!!
நாயமான நண்பன் !!!
பாசமுள்ள பகைவன் !!!
அறிவுள்ள ஆசான் !!! 
கோத்தில் குழந்தை !!!
இரக்கத்தில் இறைவன் !!!
ஈகையில் ஈசன் !!!

இவ்வாறு எல்லா உருவத்திலும் என்னோடு இருக்கின்றாய் !
அன்பைப் பொழிந்து அன்னையாய் அரவணைக்கின்றாய் !
கல்வியைக் கற்பித்து என் குருவாய் நிற்கின்றாய் !
பக்தியைப் போதித்து  பரம்பொருளாய் விளங்குகின்றாய் !
சிறு சண்டை போடுவதில் சிறுபிள்ளையாய்ச் சிணுங்குகின்றாய் !
நன்மைகளை உணர்த்தி நண்பனாய் நிற்கின்றாய் !
பார்க்கும் திசையெல்லாம் தாமாகத் தெரிகின்றாய் !
வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உடன் வருகின்றாய் !
செய்யும் ஒவ்வொரு செயலிலும் துணை நிற்கின்றாய் !

நும் வார்த்தைகளில் வாழ்வது வாய்மை
நும் நேத்திரத்தில் நிற்பது  நேர்மை
நும் உள்ளத்தில் உள்ளது உண்மை
நும் துயிலிலும் தங்குவது தூய்மை
நும் அன்பிற்கு என்றென்றும் நான் அடிமை

விண்ணுலகில் வாழும் இறைவன் எனக்காக
மண்ணுலகம் வந்தான் என் தந்தையின் உருவில்!
வீடும் நாடும் எதற்காக என்னோடு நீ இருக்கையில்!
உலகையே கண்டேன் உன் கடைவிழிப் பார்வையில் !
பேரானந்தத்தைப் பருகினேன் உன் புன்சிரிப்பில் !
படைக்கும் அஞ்சேன்  பாசத்தந்தை உடனிருக்கையில்!
விண்ணையும் வெல்வேன் வீரத்தந்தை உடனிருக்கையில்!

மனம் மகிழ்ந்தேன் நும் மடியில் தவழ !
தவம் கிடந்தேன் உம்மைத் தந்தையாய் அடைய !
புண்ணியம் செய்தேன்  நும் புதல்வியாய்த் தோன்ற !
எத்துனை பிறவி எடுத்தாலும் எந்தையாக
என்னுடன் என்றென்றும் நீயே இருந்திட இறைவனை வேண்டுகிறேன்! 

அரவத்தில் பள்ளி கொண்ட அரங்க நாதா !!
சத்தியத் திருவுருவின் பிராண நாதா !!
பெற்றேன்  பாக்கியம்  நும் பிள்ளையாய்ப் பிறக்க !!


- அரங்க ஸ்ரீஜா 

Thursday 21 November 2013

அன்புள்ள அன்னைக்கு ....



அன்பென்னும் ஆயுதம் கொண்டு
ஆண்டவனின் அருள் வென்று
இன்முகச் சிரிப்போடு - என்னை
ஈன்றேடுத்தாய் அன்னையே !

உண்மைதனை போதித்து
ஊரார்க்கு உதவி செய்து
எளிமையாய் வாழ்ந்து - என்னை
ஏற்றமடைய வைத்தாய் எந்தாயே !

ஐயமுத உணவு தந்து
ஒன்பது கோள்களாய் இருந்து
ஓங்காரப் பிரணவமாய் - என்
ஔடதமாய் விளங்கும் தாயே !

சத்தியத் திருவுருவே !
உன் தாள் பணிகிறேன் !  

அரங்க ஸ்ரீஜா 

Monday 18 November 2013

HELPING HANDS ARE BETTER THAN PRAYING LIPS!!


ஜெபம் செய்யும் உதடுகளைவிட உதவி செய்யும் கரங்களே மேலானவை!


விலைக்கு மேல் விலை விற்றாலும் 
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !

ஒருவரின் இறப்புக்குப் பின் 
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை ! 
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .

" மனிதன் தெய்வ சாயலில் 
தெய்வ சக்தியுடன் 
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "

அப்படி இருக்க வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே ! 
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்பொருள் இன்பம் ! 
என்பதை அவர் நம்பினார் 

பயிர் வாட வருந்தியவர் உயிர் வாட விட்டு விடுவாரா?
வடலூரில் அன்ன சத்திரம் அமைத்து பசிப்பிணி போக்கி உதவினார்.

இயேசு பெருமான்   "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே !! 
நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்
நான் இளைப்பாறுதல் தருவேன் !" என்று அழைத்து 
  •  பாவிகளை இரட்சித்தார் 
  • குருடர்களைப் பார்வை அடையச் செய்தார் 
  • குஷ்ட ரோகிகளைக் குணப்படுத்தினார் 
  • ஐந்து அப்பம் மீன்களைக் கொண்டு 5000 பேரைப்  பசியாற்றினார் 

மாயக் கண்ணனோ ஆயர்பாடி மக்களின் துயர் துடைத்திட செய்திட்ட லீலைகள் சொல்ல முடியாதவை!! சொல்லில் அடங்காதவை !!

ஈசன் தன் பக்தர்களின் துயர் துடைத்திட புரிந்த திருவிளையாடல்கள் 
ஒன்றா? இரண்டா? அவற்றைச்  சொல்ல ஓர் நாள் போதுமா? 

ஆக மதங்கள் எதுவாக இருந்தாலும் 
ஏழைக்கு இறங்க வேண்டும் !
இயலாதவருக்கு உதவ வேண்டும் !
என்ற தத்துவங்களையே வலியுறுத்துகின்றன .

மனிதாபிமானமே மத அபிமானம் !!!
என்பது வெறும் போதனை அல்ல
நாம் செய்து காட்ட வேண்டிய சாதனையும் ஆகும் .

ஜெபம் தெய்வத்தை நோக்கி செய்யப்படுகிறது !!
தெய்வம் எது ? 
உண்மை தான் தெய்வம் !!
அன்பு தான் தெய்வம் !!


"தேரோடும் வீதி கண்டேன் 
தெப்பக் குளம் கண்டேன் 
தேவாதி தேவனை எங்கு தேடியும் கண்டிலேனே !"
என்று ஒருத்தி தோழியிடம் வருந்திக் கூறினாள்.

"உள்ளத்தில் உள்ளானடி - அதை 
நீ உணர வேண்டுமடி 
உள்ளத்தில் உள்ளான் எனில் 
கோயில் உள்ளேயும் காண்பாயடி "
என்று தோழி அவளிக்குத் தெய்வத்தின் இருப்பிடத்தைத் தெளிவுபடுத்தினாள் . 

தெய்வத்தைப் பற்றிய இந்தத் தெளிவு வந்துவிட்டால் !
நீங்களும் நானும் தெய்வம் என்ற எண்ணம் வந்து விட்டால் !
சகிப்புத் தன்மையும் சகோதரத்துவமும்  
சாதனை செய்ய உதவும் 
சாதனங்களாகி விடும் !!!

அன்பு என்ற ஒன்று இவ்வுலகில் இல்லை எனில் 
சுயநலத்தில் வாழ்வு சுடுகாடாய் மாறிவிடும் !!
சீர் செய்து சிதைக்கச் சிறுமை முயன்றாலும் 
யார் செய்த புண்ணியமோ ? அன்பு இன்னும் வாழ்கிறது !

"உன்னிடத்தில் நீ அன்பு கூர்வது போல 
பிறரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் "
என்பதே மதங்கள் நமக்கு உணர்த்தும் போதனைகள் .

எனவே பிறருக்காக இறைவனிடம் மன்றாடுவதை விட நம்முள் நிறைந்திருக்கும் தெய்வத்தின் துணையோடு 
எங்கு தேவையோ 
அங்கு சேவைக் கரம் நீட்டுவோம் 
மனிதரில் புனிதராக வாழ்வோம் !!


-அரங்க ஸ்ரீஜா 






Thursday 14 November 2013

PAINTINGS FROM INDIAN MYTHOLOGY


SREE KRISHNA    
SREE SHIVA

RADHAKRISHNA 

SREE GANESH


 SREE KRISHNA
LORD KARTHIKEY
SREE LAKSHMI
    
SREE VISHNU

SREE RAM DARBAR

SREE DURGA
















Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...