Friday 3 January 2014

இறைவன் !!!




அன்போடும் பண்போடும் என்னை வளர்க்கும் அன்னை நீ !

அறிவோடும் தெளிவோடும் என்னை ஆளாக்கிய தந்தை நீ !

கலைகளைத் தெளிவுறக் கற்பிக்கும் என் குருநாதன் நீ !

கற்காத கலைகளிலும் என்னை தேர்ச்சியடைய வைத்தவன் நீ !

அச்சம்  கொள்ளுகையில் தைரியம் தரும் அண்ணன் நீ !

அச்சுறுத்தும் இடையூரிலிருந்து என்னை மீட்கும் மன்னன் நீ !

சங்கடங்களில் உடன் துணை நிற்கும் சகோதரன் நீ !

சந்தோஷங்களை அள்ளித் தரும் என் சொந்தமும் நீ !

நாட்டியத்தில் என் சலங்கை ஒலியாய் இருப்பதும் நீ !

பாட்டில் என் தாளமும் ராகமுமாய்த் திகழ்வதும் நீ !

காணும் திசையெல்லாம் தோன்றும் கடவுள் நீ !

காரிகையின் மனம் கவர்ந்த கயவனும் நீ !

நெருக்கடியில் நல்வழி காட்டும் நண்பன் நீ !

நெருங்கி வந்தால் விலகி ஓடும் மாயவன் நீ !

வீணை மீட்டுகையில் விரலில் நடமாடுபவன் நீ !

வினைப் பயனிலிருந்து மீட்கும் விமோச்சணன் நீ !

சித்திரத்தில் என் கரம் தீட்டும் உருவம் நீ !

சிந்தையில் என்றும் குடிகொண்ட தர்மம் நீ !

வாழ்க்கைப் பாதையை உணர்த்திய வழிகாட்டி நீ !

வாழ்த்துகளை வாரி வழங்கிய என் வள்ளல் நீ !


அன்னையின் உள்ளம் நீ !

ஆன்மாவின் உயிரும் நீ !

சிற்பியின் உளியும் நீ !

சிறுபிள்ளையின் சிரிப்பும் நீ !

கொஞ்சும் சலங்கையும் நீ !

பிஞ்சுக் குழந்தையும் நீ !

கண்ணின் கருவிழி நீ !

கன்னியின் கருத்தும் நீ !

விண்ணின் சந்திரன் நீ !

மண்ணின் மன்னவன் நீ !

என் எல்லாமும் நீ !

என் எல்லையும் நீ !

உணர்ந்தேன் உன்னை !

அர்ப்பணித்தேன் என்னை !


 - அரங்க ஸ்ரீஜா 

No comments:

Post a Comment

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...