Saturday 11 January 2014

மழை !!!



மண்ணில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும்
மான்விழியாள் மனதை மாயக்கியதே !
என் தனிமையைப் போக்க வந்தாயோ !
உன் தண்மையை உணர்த்த விழுந்தாயோ !

விண்ணில் இருந்து நீ விழும் அழகில்
விம்மினேன் நான் வியப்பில் !
விருட்சம் வளர வருகின்றாயோ !
என் விரகத்தி போக்கப் பொழிகின்றாயோ !

மழைக்கால மேகம் ஊர்வலம் போகுதே !
விழைகிறதே மனம் உடன் செல்லவே !
உன் தீண்டலில் திகைத்தேன் !
என் துன்பங்களைத் தொலைத்தேன் !

விழும் துளிகளில் நனைவதற்கு !
விடுமுறை அளித்தேன் குடைகளுக்கு !
மின்னலும் இடியும் நண்பர்கள் உனக்கு !
மின்மினி போல் தெரிகிறாய் எனக்கு !

அடிக்கும் சாரலின் ஆனந்தத்தில் !
அடியவள் உருகினேன் அகத்தில் !
உல்லாச தூரலின்  மணத்தில் !
உற்சாகம் பெருகியது மனதில் !

தங்கம் போல் மின்னுகிறாய் !
எங்கும் செழிப்பைத் தருகிறாய் !
மண்வாசம் தந்து மனம் நிறைந்தாய் !
என்வாசல் வந்து விலகி நின்றாய் !

சில்லென்ற மழைத் துளியே !
என் சிந்தையில் நின்றாயே !
கரங்களில் பட்டு சிதருகிராயே !
கருவிழி சிவக்கச் செய்கின்றாயே ! 

பொழியும் பொது பேரானந்தம் தருகின்றாய் !
விழியில் விழுந்து வியப்பை அளிக்கின்றாய் !
தரணிதனில் தண்மை காக்கின்றாய் !
தரிசனம் தந்து உடன் மறைகின்றாய் !

தொட்டு விளையாடுகிறாய் என்னை !
கட்டித் தழுவுகிறாய் மண்ணை !
விட்டுப் பிரிந்தாய் என்னை !
எட்டிப் பிடிப்பேன் உன்னை !

 - அரங்க ஸ்ரீஜா 

Thursday 9 January 2014

கிராமம்...


பரவும் பகலவனின் கதிர் !
பசுமைப் பயிர்களின் உயிர் !

நிலத்தை உழும் ஏர் !
நிலதேவியின் தேர் !

வானுயர வளர்ந்த மரங்கள் !
வானுலகம் செல்லும் வழிகள் !

ஆநிரைகளின் கூட்டம் !
ஆண்டவனின் தோட்டம் !

உணவளிக்கும் உழவர் !
உலகத்தின் முதல்வர் !

ஊருக்கு ஓர் ஊருணி !
நீர் தரும் பேரணி !

அழகிய ஊற்றாய் அருவி !
அழகு சேர்க்கும் கருவி !

படர்ந்த வயல்வெளி !
பசுமைப் புல்வெளி !

வீரம் கொண்ட மாந்தர் !
வீரர்களில் வேந்தர் !

மனம் வீசும் தோட்டம் !
மனங்கவர் பூக்கள் கூட்டம் !

மழை தரும் மேகம் !
மயில்களின் மோகம் !

குயில் பாடும் பாட்டு !
குழந்தைக்குத் தாலாட்டு !

வாசலின் கோலங்கள் !
வர்மரின் ஓவியங்கள் !

ஊர்கோலத் திருவிழா !
ஊர்மக்களின் பெருவிழா !

வேற்றுமையில் ஒருமை !
ஒற்றுமையின் வலிமை !

 எங்கு நோக்கிலும் இனிமையான காட்சி !
இங்கு நடப்பதோ இயற்கையின் ஆட்சி !

எங்கு தேடினாலும் கிடைக்காத ஆனந்தம் !
இங்கு வாழ்ந்திட செய்திட்டேன் புண்ணியம் !


அரங்க ஸ்ரீஜா

Friday 3 January 2014

இறைவன் !!!




அன்போடும் பண்போடும் என்னை வளர்க்கும் அன்னை நீ !

அறிவோடும் தெளிவோடும் என்னை ஆளாக்கிய தந்தை நீ !

கலைகளைத் தெளிவுறக் கற்பிக்கும் என் குருநாதன் நீ !

கற்காத கலைகளிலும் என்னை தேர்ச்சியடைய வைத்தவன் நீ !

அச்சம்  கொள்ளுகையில் தைரியம் தரும் அண்ணன் நீ !

அச்சுறுத்தும் இடையூரிலிருந்து என்னை மீட்கும் மன்னன் நீ !

சங்கடங்களில் உடன் துணை நிற்கும் சகோதரன் நீ !

சந்தோஷங்களை அள்ளித் தரும் என் சொந்தமும் நீ !

நாட்டியத்தில் என் சலங்கை ஒலியாய் இருப்பதும் நீ !

பாட்டில் என் தாளமும் ராகமுமாய்த் திகழ்வதும் நீ !

காணும் திசையெல்லாம் தோன்றும் கடவுள் நீ !

காரிகையின் மனம் கவர்ந்த கயவனும் நீ !

நெருக்கடியில் நல்வழி காட்டும் நண்பன் நீ !

நெருங்கி வந்தால் விலகி ஓடும் மாயவன் நீ !

வீணை மீட்டுகையில் விரலில் நடமாடுபவன் நீ !

வினைப் பயனிலிருந்து மீட்கும் விமோச்சணன் நீ !

சித்திரத்தில் என் கரம் தீட்டும் உருவம் நீ !

சிந்தையில் என்றும் குடிகொண்ட தர்மம் நீ !

வாழ்க்கைப் பாதையை உணர்த்திய வழிகாட்டி நீ !

வாழ்த்துகளை வாரி வழங்கிய என் வள்ளல் நீ !


அன்னையின் உள்ளம் நீ !

ஆன்மாவின் உயிரும் நீ !

சிற்பியின் உளியும் நீ !

சிறுபிள்ளையின் சிரிப்பும் நீ !

கொஞ்சும் சலங்கையும் நீ !

பிஞ்சுக் குழந்தையும் நீ !

கண்ணின் கருவிழி நீ !

கன்னியின் கருத்தும் நீ !

விண்ணின் சந்திரன் நீ !

மண்ணின் மன்னவன் நீ !

என் எல்லாமும் நீ !

என் எல்லையும் நீ !

உணர்ந்தேன் உன்னை !

அர்ப்பணித்தேன் என்னை !


 - அரங்க ஸ்ரீஜா 

Thursday 2 January 2014

என் கண்ணான கண்ணன் !



பேரானந்தத்தைத் தந்தருளும் பேரழகன் !
பேதைக்குப் பகலவன் போன்றவன் !

பெருவிழியால் புவிதனை மயக்கும் பார்த்திபன்  !
பெதும்பை அன்றாடம் துதிக்கும் பாற்கடல் வேந்தன் !

மகுடத்தில் மயிற்பீலி சூடி நிற்கும் மதுசூதனன் !
மங்கையின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவன் !

மலர்மாலை சூடி விளையாடும் முரளி மனோகரன் !
மடந்தைக்கு மகிழ்வை அள்ளித்  தரும் முகுந்தன் !

அர்ஜுனன்னுக்குக் கீதோபதேசம் செய்த அச்யுதன் !
அரிவைக்குக் கீதையாய் விளங்கும் அனந்தன் !

தென்றலாய்ப்  புல்லாங்குழலூதும் துவாரகதீசன்  !
தெரிவையின் பார்வையில் தங்கிடும் துவாபரநாதன் !

பேரதிசயங்கள் பல நிகழ்த்தும் பரந்தாமன் !
பேரிளம் பெண்ணின் பூஜைக்குரிய பகவான் !

புவியெங்கும் நிறைந்து நிற்கும் புருஷோத்தமன் !
பூவையின் துணையாய் விளங்கும் புவன சுந்தரன் !

கோவர்த்தன மலையைத் தூக்கிய கோபாலன் !
கோதையின் உள்ளம் கவர்ந்த கோவிந்தன் !

காளியனின் சிரசில் நர்த்தனம் ஆடிய கண்ணன் !
காரிகையின் சலங்கையில் குடிகொண்ட கணியன் !

வெண்ணையைத் திருடும் வேங்குழல் பாலன் !
வெகுளிப்பெண்ணின் வேதனை தீர்க்கும் வேடன் !

ஹரியின் அவதாரமாய்த் தோன்றிய ஹரிகிருஷ்ணன் !
ஹ்ருதயங்களில் நிலைத்து நிற்கும் ஹ்ருஷிகேசன் !

குழலூதி உலகை மயங்கச் செய்யும் குருவாயூரப்பன் !
குழந்தைக்கு உலகநீதியைப் போதித்த குருவானவன் !

ஜகத்தினில் தர்மத்தை நிலைநாட்டும் ஜகன்னிவாசன் !  
ஜனனியின் தலைவனாய்த் திகழும் ஜனார்தனன் !

சங்குச் சக்கரம் ஏந்திய நவநீத கிருஷ்ணன் !
சகியின் துயர் துடைக்கும்  நந்தகோபன் !

கர்வம் கொண்ட அசுரரை வதைத்த கேசிநிஷூதனன்  !
கன்னியின் கருவிழியாய்க் காட்சியளிக்கும் கேசவன் !
   
யசோதையின் பிள்ளையாய் வளர்ந்த யாதவன் !
யமுனா தீரத்து மனங்களின் யோகேஸ்வரன் !

வார்த்தைகளால் ஜாலம் செய்யும் வார்ஷ்ணேயன் !
வாழ்வின் ரகசியத்தைப் போதித்த வாசுதேவன் !

என் சர்வமுமாய் விளங்கும் சர்வேஸ்வரனே !
என்னை சமர்ப்பிக்கிறேன் உன் சரணங்களிலே !


- அரங்க ஸ்ரீஜா 

Wednesday 1 January 2014

என் காவியத் தலைவன் !!



பரணி  போற்றும் நாயகனே !
புரவி  ஏறி வருபவனே !
புதுக்  கவிதை  வடிக்கின்றேன்
புவன  சுந்தரனை  அடையவே !

எங்கு  இருக்கிறாய் ?  - ஏன்
ஏங்க  வைக்கிறாய் ?
காண  விழைகிறேன்  –ஏன்
கலங்கச்  செய்கிறாய் ?

அறியேன்  உன்  தோற்றம்
அறிய  விரும்புதே  நெஞ்சம்
மலர்  முகம்  காணாமலே
மனம்  நிறைந்தாய்  கண்ணாளனே !

தரிசனம்  அளிக்க  மாட்டாயா  ?
கரிசனம்  பார்க்க  மாட்டாயா ?
உன்னைச்  சேரத்  துடிக்கின்றேன்
என்னை  ஏற்க  மாட்டாயா ?

ஏங்கித்  தவிக்கிறதே  மனம்
உன்னைக்  காண  வேண்டுதே  தினம்
காத்து  நிற்கிறேன்  உனக்காக
காதல்  நிறைந்த விழிகள்  சிவக்க 

கனவில்  காண்கிறேன்  உன்னை
கண்டதும்  மறக்கிறேன்  என்னை
முகிலாய்  தோன்றினாய்  விண்ணோடு
கவிதையாய்  மாறினாய்  கையோடு


நினைவுகளில்  நடமாடும்   உன்னை
நேரில்  காணவிழைகிறேன்  நங்கை 
மனம்  வென்ற  மணவாளனே !
முகம்  காண  மனம்  ஏங்குதே !

உன்  வருகைக்காகக்  காத்திருப்பேன்
மான்விழி  சிவக்கப்  பூத்திருப்பேன்
மாலை  சூட  வருவாயா  ?
மனதை  எடுத்துச்  செல்வாயா ?

உன்  உள்ளம்  நிறைவேனா ?
இல்லை  விண்ணை  அடைவேனா ?        
விடைகள்  அறியாமலே
விழிகள்  கலங்கிடுதே !

- அரங்க ஸ்ரீஜா 

Tuesday 31 December 2013

இயற்கை



தங்கமாய் மின்னும் கதிரவனின் கதிரொளி !
தங்கப் பயிர்களின் வாழ்விற்கு  உயிரொளி !

தாமரையில் மலர்கின்ற இதழ்கள் !
தன்னிகரற்ற அழகுப் பெட்டகங்கள் !

பச்சைப் பட்டாடையாய்ப் பரந்த வயல்கள் !
பாமரர் பசி போக்கும் சுந்தர வெளிகள் !

பொங்கிப் பெருகும் கடலலைகள் !
பொங்கும் பேரானந்தத்தின் சுவடுகள் !

கொஞ்சும் கிளிகளின் சுந்தர மொழிகள் !
பிஞ்சுக் குழந்தையின் மழலை மொழிகள் !

சிகரம் தொடும் உயர்ந்த மலைகள் !
செதுக்கினாலும் கிடைக்காத சிலைகள் !

மண்ணில் பொழியும் மழையின் துளிகள் !
மானுடம் வாழ வித்திட்ட வழிகள் !

மலரும் பூக்களின் நறுமண வாசம் !
மங்கையின் மனம் முழுவதும் வீசும் !

பறந்துத் திரியும் பறவைக் கூட்டம் !
பார்ப்பவர் மனதில் மகிழ்வை நாட்டும் !

தோகை விரித்தாடும் மயில் !
தோற்றத்தில் எத்தனை எழில் !

பூக்களில் அமரும் பட்டாம்பூச்சி !
பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சி !

இயற்கையில் வாழும் கன்னி !
வியக்கிறேன் அதன் சிறப்பை எண்ணி !

அரங்க ஸ்ரீஜா 

Friday 27 December 2013

அன்பான என் தந்தைக்கு...



அன்புள்ள அப்பா !!!
தயைமிகு தந்தை !!!
நாயமான நண்பன் !!!
பாசமுள்ள பகைவன் !!!
அறிவுள்ள ஆசான் !!! 
கோத்தில் குழந்தை !!!
இரக்கத்தில் இறைவன் !!!
ஈகையில் ஈசன் !!!

இவ்வாறு எல்லா உருவத்திலும் என்னோடு இருக்கின்றாய் !
அன்பைப் பொழிந்து அன்னையாய் அரவணைக்கின்றாய் !
கல்வியைக் கற்பித்து என் குருவாய் நிற்கின்றாய் !
பக்தியைப் போதித்து  பரம்பொருளாய் விளங்குகின்றாய் !
சிறு சண்டை போடுவதில் சிறுபிள்ளையாய்ச் சிணுங்குகின்றாய் !
நன்மைகளை உணர்த்தி நண்பனாய் நிற்கின்றாய் !
பார்க்கும் திசையெல்லாம் தாமாகத் தெரிகின்றாய் !
வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் உடன் வருகின்றாய் !
செய்யும் ஒவ்வொரு செயலிலும் துணை நிற்கின்றாய் !

நும் வார்த்தைகளில் வாழ்வது வாய்மை
நும் நேத்திரத்தில் நிற்பது  நேர்மை
நும் உள்ளத்தில் உள்ளது உண்மை
நும் துயிலிலும் தங்குவது தூய்மை
நும் அன்பிற்கு என்றென்றும் நான் அடிமை

விண்ணுலகில் வாழும் இறைவன் எனக்காக
மண்ணுலகம் வந்தான் என் தந்தையின் உருவில்!
வீடும் நாடும் எதற்காக என்னோடு நீ இருக்கையில்!
உலகையே கண்டேன் உன் கடைவிழிப் பார்வையில் !
பேரானந்தத்தைப் பருகினேன் உன் புன்சிரிப்பில் !
படைக்கும் அஞ்சேன்  பாசத்தந்தை உடனிருக்கையில்!
விண்ணையும் வெல்வேன் வீரத்தந்தை உடனிருக்கையில்!

மனம் மகிழ்ந்தேன் நும் மடியில் தவழ !
தவம் கிடந்தேன் உம்மைத் தந்தையாய் அடைய !
புண்ணியம் செய்தேன்  நும் புதல்வியாய்த் தோன்ற !
எத்துனை பிறவி எடுத்தாலும் எந்தையாக
என்னுடன் என்றென்றும் நீயே இருந்திட இறைவனை வேண்டுகிறேன்! 

அரவத்தில் பள்ளி கொண்ட அரங்க நாதா !!
சத்தியத் திருவுருவின் பிராண நாதா !!
பெற்றேன்  பாக்கியம்  நும் பிள்ளையாய்ப் பிறக்க !!


- அரங்க ஸ்ரீஜா 

Asamuyta Hasta Shloka - Single Handed Gestures

Hastas or Hasta Mudras are an integral part of Bharatanatyam, where stories are brought to life through hand gestures combined with facial e...